பலாத்காரம் செய்யப்பட்டு கொலை – இளம் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…!!

புதுச்சேரியில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி கொசபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி-அகிலாண்டேஸ்வரி. இவர்களின் மகள் அம்சபிரபா. இவர், சில தினங்களுக்கு முன்பு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார். இந்த நிலையில், அம்ச பிரபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் அளிக்கப்பட்டது. அதில் அம்சபிரபா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment