நாயுடு ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை-நடிகை ரோஜா கண்டனம்..!

ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க சந்திரபாபு நாயுடு அரசு தவறிவிட்டதாக நடிகையும் ஒய்.எஸ்.ஆர்.கட்சியின் எம்.எல்.ஏவுமான ரோஜா குற்றம் சாட்டினார். விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா டச்சேபள்ளியில் 9 வயது சிறுமி 60 வயதான பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தினார்.

சிறுமியை சிதைத்து தப்பியோடிய ஆட்டோக்காரன் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.முன்னதாக, குண்டூரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment