நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே..!! மோடி அரசின் 4 ஆண்டு சாதனை-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பெட்ரோல், டீசல் விலையினை உயர்த்தி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்துள்ளதே மோடி அரசின் 4 ஆண்டு சாதனை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ள நரேந்திரமோடி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றார். மேலும்  மக்கள் கொதிதெழுந்து மோடி தலைமையிலான  அரசை அகற்ற தயாராகி வருவதாகவும் நாராயணசாமி கூறி உள்ளார்.

புதுச்சேரியின் வளர்ச்சியில் இதுவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
author avatar
kavitha

Leave a Comment