Categories: Uncategory

தொழில்நுட்பம் தீவிரவாதிகளுக்கும் உதவுகிறது : பாரக் ஒபாமா

டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் பேசியது என்னவென்றால்:

தொழில்நுட்பமானது, வளர்ச்சியடைந்து வரும் உலகில் இடைவெளிகளை நிரப்பும் பாலமாக இருக்கிறது. அதேநேரத்தில், தொழில்நுட்பத்தின் திடீர் வளர்ச்சியில் பல்வேறு இணையதளங்கள் மக்களுக்கு தீய செய்திகளைப் தருகின்றன. நவீன தகவல் சாதனங்கள் தீவிரவாதிகளுக்கும் உதவுகின்றன. தீயவர்களும் சமூக விரோத சக்திகளும் நவீன தகவல் சாதன வசதிகளை பயன்படுத்திக் கொள்கின்றன. மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் தகவல் தொழில்நுட்பமானது, மக்களை பிரிவினையிலும் தனிமைப்படுத்துவதிலும் கொண்டு சென்றுவிடும்.

2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு நான் வந்தபோது மத சகிப்புத்தன்மை, அனைவருக்கும் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்றும் உரிமை, மத அடிப்படையில் பிளவு இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து தங்களை இந்தியர்களாக கருதுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக மற்ற நாடுகளில் இதுபோன்று நடப்பதில்லை. இந்தியா தனது முஸ்லிம் மக்களை போற்றி பேணி வளர்க்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.’ இவ்வாறு ஒபாமா பேசினார்.

பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்த கேள்விக்கு அவர், ‘‘ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் இருந்தார் என்பது பாகிஸ்தானுக்கு தெரிந்திருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அதை நாங்கள் தீவிரமாக கண்காணித்தோம்’’ என்றார்.

மேலும், ஒபாமா பேசுகையில், ‘‘பிரதமர் மோடியை விரும்புகிறேன். இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை அவர் வைத்துள்ளார். அதிகாரமட்டத்தை அவர் நவீனமாக்கி வருகிறார். பாரிஸில் நடந்த பருவநிலை தொடர்பான மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்காற்றினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் என் நண்பர்தான். இந்தியாவின் நவீன பொருளாதாரத்துக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். மேலும், மோடியும் மன்மோகனும் சிறந்த தலைவர்கள்’’ என்று பாரக் ஒபாமா கூறினார்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

20 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

43 mins ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

1 hour ago

இன்னும் 4 போட்டி இருக்கு … பாத்துக்கலாம் ..- தோல்விக்கு பின் ருதுராஜ் !!

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…

1 hour ago

பேனரை கிழிச்சது தப்பு தான்! மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!

Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…

1 hour ago

நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று கிடுகிடுவென உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

1 hour ago