தேர்தல் வெற்றி நிலவரம் வைகோ பரபரப்பு பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது :

தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி திராவிட இயக்க பூமி தமிழகம் என்பதை இந்திய அரசியல் அரங்கத்திற்கு தமிழக மக்கள் பறைசாற்றியுள்ளனர் தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment