‘தென்னிந்தியாவிற்கு தனி தலைநகர் வேண்டும்’ குரல் கொடுக்கும் பவர் ஸ்டார் பவன் கல்யாண்!

தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருபப்வர் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவர் படங்கள் வருகிறது என்றால் திரையரங்கில் திருவிழா கோலம் போல இருக்கும். அதனை பயன்படுத்தி அவர் ஜனசேனா எனும் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே இவரது அண்ணன் சிரஞ்சீவியும் கட்சி தொடங்கி வைத்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக தனது 25வது படமான அக்னியாதவசி எனும் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தான் முழுநேர அரசியலில் களமிறங்க போவதாக அறிவித்து அரசியலில் இறங்கினார். இவர் தற்போது மத்திய அரசுக்கு ஓர் கோரிக்கை வைத்துள்ளார். அதில், தென்னிந்திய மாநிலங்களின் பிரச்சனைகள் மத்திய அரசுக்கு தெரிவதில்லை ஆதலால், தென்னிந்தியாவிற்கு என்று ஓர் தனி தலைநகரை அறிவித்து விடுங்கள் என் கோரியுள்ளார்.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment