தூத்துக்குடி:ஸ்டெர்லை ஆலையில் சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்ய ..!மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவு..!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.  தூத்துக்குடியில்  நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் தூத்துக்குடியே கலவர பூமியானது.

இந்நிலையில் ஸ்டெர்லை ஆலையில் சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கூறுகையில் ஆலைக்கான அனுமதியை முந்தைய அரசு கொடுத்ததூ.13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.ஆய்வு குறித்து மத்திய அரசின் அதிகாரிகள் கூறுகையில் கோப்புகள் உடனடியாக ஆய்வு தொடங்கிவிட்டது.

யார் யார் எப்பொழுது ஆலைக்கு அனுமதி அளித்தார்கள் , என்னென்ன அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது தூத்துக்குடி ஆட்சியரிடம் ஏற்கனவே அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment