திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா..! அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு..!!

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக தலைவரும் ,திருவாரூர் தொகுதி எம்.ஏல்.ஏவும் ஆன கருணாநிதியின் மறைவால் அத்தொகுதி காலியாக உள்ளது.இந்நிலையில் நெடுநாட்களாக இடைதேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கட்சிகள் தனது வேட்பாளரை அறிவித்து வரும் நிலையில் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ என்ற தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment