திருப்பதி குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை…பக்தர்களுக்கு சிரமம்..!!

திருப்பதி திருமலையில் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன்கூடிய மழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. 

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. விடாமல் பெய்துவரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள், குழந்தைகள் குளிர் தாங்கமுடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment