தனது சம்பளத்தை கேரளா மக்களின் நிவாரண உதவிக்கு வழங்கிய நடிகை !!

கேரளா வெள்ள பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அனைத்து மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். திரையுலகினர் பலர் பலவிதங்களில் உதவி கரங்களை நீட்டி வருகின்றனர். இயற்கையின் கோரத்தாண்டவத்தால் கேரளா தனது அழகை இழந்து வெறும் தண்ணீரால் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ள நடிகை பூனே பாண்டே, தனது பங்கிற்கு வெல்ல நிவாரண உதவியாக தனது ஒரு பட சம்பளத்தை வழங்கியுள்ளார்.
இவர் தெலுங்கில் நடித்து வரும் “லேடி கபார் சிங் ” படத்துக்காக, தனக்கு கொடுக்கப்பட்ட முழு சம்பளத்தையும் வெல்ல நிவாரண பணிக்காக வழங்கியுள்ளார். இவரது இந்த செயல் திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment