ஜெய் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும்? தயாரிப்பாளர்

அண்மையில் வெளியான ‘பலூன்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அவர் குடித்து விட்டு படப்பிடிப்பிற்கு வந்தார், படம் தாமதமாக அவர் தான் காரணம். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து ஜெய் தற்போது நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு படமான ‘ஜருகண்டி’ படத்தை தயாரிக்கும் பத்ரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜெய்க்கு பலூன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பலூன் படம் குறித்த சில புகார்களை படித்தேன். இதை வித்தியாசமானதாக பார்க்கிறேன் நான் எந்த தாமதமோ அல்லது முறையற்ற நடத்தைகளோ அவரால் எனது ஜருகண்டி படத்தில் பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment