சாத்தூர் அமமுக அலுவலகத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளையும் விதித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சோதனையில், பல கோடிகள் சிக்கியுள்ளது.

இதனையடுத்து, இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூர் தொகுதியில் எதிர்கோட்டை எனும் இடத்தில் உள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அமமுக அலுவலகத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment