கேரளா மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 1 கோடி அளித்த தோனி பட ஹீரோ…..!!!

கேரளா மக்களுக்காக ஒரு கோடி ரூபாயை நிவாரண நிதியாக ‘தோனி’ பட நடிகர் சுஷாந்த் சிங்க ராஜ்புத் அளித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பல்வேறு மாநில அரசுகள், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரக்ளரு படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கேரளா மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் வேண்டுகோளை ஏற்று இதை அவர் செய்ததாக கூறியுள்ளார்.

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது முதல் அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சுஷாந்த் சிங் பதிவிட்டு வந்தார். மேலும், அவரது வலைதள கணக்குகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்தின் வரைபடங்களையும் பகிர்ந்து வந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment