குழந்தையின் உயிரை காவு வாங்கிய ஆசிட்!

ஐதராபாத்தில் அமித் நகர் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான். இவருக்கு 11 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அக்குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பாட்டிலில் உள்ள ஆசிட்டை எடுத்து குடித்துள்ளது.

இதனையடுத்து, குழந்தை அழுதவுடன், விஷம் தெரிந்த பெற்றோர் அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment