காதல் ஜோடிகள் கரண்ட் ஷாக்கால் தற்கொலை…!!!

ஈரோடு மாவட்டம் ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர். சுரேஷ்க்கும் அப்பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு பேரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.ஜோதியுடன் சுரேஷ்க்கு உள்ள தொடர்பு குறித்து சிலர் மாரியம்மாளுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாரியம்மாள் சுரேசை கண்டித்து உள்ளார். இருப்பினும் ஜோதியை சந்திப்பதை சுரேஷ் கைவிடவில்லை. இதனால் மாரியம்மாளுக்கும் சுரேஷ்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Image result for தற்கொலை

சுரேசிடம் கோபித்துக்கொண்டு பூதப்பாடி அருகே அலங்காரியூரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு மாரியம்மாள் சென்றுவிட்டார்.மனைவி இல்லாததால் தனக்கு தன்னை கேட்க ஆளில்லை என்றதும், சுரேஷ் அடிக்கடி ஜோதியை தனிமையில் சந்தித்துள்ளார். ஜோதி திடீர் திடீரென வெளியே போவது, வருவது என இருந்துள்ளார். இதனை சந்தேகப்பட்ட ஜோதியின் கணவர் சின்னச்சாமி ஜோதியை பின்தொடர்ந்துள்ளார். அப்போது ஜோதியின் கூடாநட்பு  விவகாரம் சின்னச்சாமிக்கும் தெரியவந்தது.வீட்டுக்கு வந்த ஜோதியை கண்டித்த சின்னசாமி, இனி சுரேஷை சந்திக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் சுரேசுடன் உள்ள தொடர்பை விட ஜோதி மறுத்து உள்ளார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சில நாட்கள் சின்னச்சாமியும் வேலைக்கு  வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாம் இருந்துள்ளார்.
Image result for LOVE தற்கொலை

சின்னச்சாமி வீட்டிலேயே இருந்ததால் ஜோதியால் சுரேஷை சந்திக்க முடியவில்லை. சமீபத்தில் சின்னச்சாமி வீட்டில் இல்லாத நேரத்தில் வெளியே சென்ற ஜோதி, சுரேஷை சந்தித்து, வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையை கூறியுள்ளார். மேலும் தன்னால் சின்னச்சாமியுடன் வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல சுரேஷை சந்திப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அத்தாணி அருகே உள்ள வரதன் தோட்டம் என்ற பகுதிக்கு ஜோதி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ், ஜோதியுடன் பேசிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் இருவரும் அந்த இடத்தில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment