எங்க போன என்ன நீங்க நடிச்ச போதும்……

தெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.

என்.டி.ஆர். பயோபிக்’ என தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

தெலுங்கில் முதன்முறையாக நடிக்க இருக்கிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

பெங்காலி படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பாலன். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த ‘களரி விக்ரமன்’ படன் இன்றுவரை ரிலீஸாகவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘பரினீடா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டாக, பாலிவுட்டில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார்.

தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் வித்யா பாலன் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment