உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜராகாத ஆதிதிராவிட நலத்துறை அதிகாரியைக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆதிதிராவிட நலத்துறை அதிகாரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கொன்றில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராகுமாறு ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் முருகேஸ்வரிக்கு நீதிபதி இரண்டு முறை உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஆஜராகாத முருகேஸ்வரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment