உடனடியாக இருமலை குறைக்க இதை செய்யுங்கள்!

இருமல் சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்று அல்லது அலர்ஜியினால் உண்டாகும். அதனை கவனிக்காமல் விடும்போது நுரையீரலுக்கும் பரவி சளி அடைத்து இதனால் மூச்சிரைப்பு, சுவாச பாதிப்பு ஆகியவைகள் உண்டாகும். அந்த சமயத்தில் எதிர்ப்பை காட்டும் விதமாக அலர்ஜியை ஏற்படுத்தும் ஒருவகை ரத்த செல்கள் அலர்ஜியை உண்டாக்குகிறது.

பத்திய சாப்பாடு:

ஒரு விஷயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெறும் மருந்துக்கள் தவிர உணவிலும் நீங்கள் கவனம் எடுத்துக் கொள்வது முக்கியம். சுடு நீரை குடிப்பது, மிளகு, பூண்டு, மஞ்சள்ஆகியவற்றை கட்டாயம் குளிர்காலத்தில் சேர்த்துக் கொள்வது அவசியம்.இந்த மருந்து வகைகளை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்

வீட்டிலேயே தயாரிக்கலாம்:

அதுதவிர இங்கே சொல்லப்போகும் இந்த மருந்து நிஜமாகவே உங்கள் இருமலை கட்டுப்படுத்தும் . வெறும் உண்ணும் உணவுப் பொருள்களால் செய்யப்படும் இந்த மருந்து உங்களுக்கு பக்க விளைவுகளை தராது. குழந்தைகளுக்கும் தரலாம். தேன், வாழைப்பழம், மற்றும் நீர் கலந்து செய்யப்படும் இந்த மருந்து உங்கள் நுரையீரலுக்கு மட்டுமின்றி, வயிற்றிற்கும் நன்மை தருகிறது.

 

தயாரிக்கும் முறை :

நன்றாக பழுத்த இரண்டு வாழைப் பழங்களை மசித்துக் கொள்ளுங்கள். மர ஸ்பூன் அல்லது கரண்டி கொண்டு மசிப்பது நல்லது. இதனால் பழம் நிறம் மாறாமல்  தடுக்க முடியும். பின் அதில் நீரை ஊற்றி மூடிவைத்து அரை மணி நேரம் அப்படியே விடுங்கள்.நீர் குளிர்ந்த பின் தேனை அதில் ஊற்றவும். நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் இந்த கலவையை வடிகட்டி குடிக்கலாம். அப்படியே குடித்தாலும் நல்லதுதான். இவரு செய்வதன் முலம் தொடர்ச்சியாக வரும் இருமலை குறைக்க முடியும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment