இளைஞர்களின் நட்சத்திரம் மாவீரன் பகத்சிங்_கின் ஒளி வீசும் பொன் மொழிகள் ..!!

இக்காலம் மட்டுமில்லாமல் எக்காலமும் இளைஞர்களின் மனதில் உறுதியுடன் வாழும் நட்சத்திரமான  மாவீரன் பகத்சிங்_ கின் ஒளி வீசும் பொன் மொழிகள்

“எதிலும் குருட்டு நம்பிக்கை ஆபத்தானது .அது மனிதனின் மூளையை முடமாக்கி அவனை பிற்போக்கில் தள்ளி விடும்’

“ஓர் புரட்சி கட்சிக்கு ஊர் உறுதியான திட்டம் தேவை, புரட்சி என்றாலே செயல்தான்.திட்டமிட்ட நடவடிக்கை மூலம் மாற்றங்களை கொண்டு வருவதுதான் புரட்சி ஆகும்.திட்டமிடாது  ஏதும்  நடந்துவிடாது”

“நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன் ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் , குறிக்கோள்கள் , இந்த உலகத்தை பிரகாசிக்க செய்யும்”

“அம்மா எனது நாடு ஒருநாள் சுதந்திரம் அடைந்து விடும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை , ஆனால் வெள்ளைக்காரதுரைமார்கள் விட்டுச் சென்ற நாற்காலிகளில் மாநிறத்துரைமார்கள் வந்து உட்கார்ந்து விடுவார்கள் என்று எனக்கு பயமாக இருக்கிறது”

“அனைவருக்கும் விடுதலை கொண்டுவரக்கூடியதும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றத்தக்க கூடியதுமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்பலிகள் தவிர்க்க இயலாதவை”

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment