இருந்தாலும் இது ரொம்ப ஓவர் கோலி …!இந்திய  கிரிக்கெட் வீரர்   ஹர்பஜன் சிங்

இந்திய அணி மாற்றம் குறித்து இந்திய  கிரிக்கெட் வீரர்  ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது..203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
இந்திய அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக பூம்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய  கிரிக்கெட் வீரர்   ஹர்பஜன் சிங் கூறுகையில் ”தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்த வரைக்கும் 38 டெஸ்டிலும் மாற்றம் என்பது மிகவும் ஓவர் . ஆனால், ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமானவர்கள். அதேபோல் ஒவ்வொரு அணியின் செயல்பாடும் வித்தியாசமானவை. இப்படி மாற்றுவது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். அதனால் மாற்ற விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
DINASUVADU

Leave a Comment