இன்று தமிழகம் முழுவதும் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தொடக்கம்!

தமிழகம் முழுவதும் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று Preliminary எனப்படும் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

வழக்கறிஞர்களாக பதிவு செய்த அனைவரும் இந்த தேர்வை எழுதலாம் என்பதால், மாநிலம் முழுவதும் காலையில் 10 மணிக்கு தொடங்கிய தேர்வை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இதில், வெற்றிபெறுவோருக்கு, வரும் அக்டோபர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment