இனி !! திருப்பதியில் வரும் 16 தேதி வரை தரிசனம் முறையில் மாற்றம்-தேவஸ்தானம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16 தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இலவச தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்து அறிவித்துள்ளது.
திருப்பதியில் வரும் 16 தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான யாகசாலை பூஜை நடைபெறுவதால் இலவச தரிசனம் தவிர மற்ற அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது தேவஸ்தானம்.
இன்று முதல் 16 ஆம் தேதி வரை யாகசாலை பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் இலவச தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று  தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சிறப்பு தரிசனம், மலைப்பாதையில் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களுக்குமான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு Dinasuvadu_டன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment