ஆப்பு வைத்தது கிரிக்கெட் வாரியம்….ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும் என திட்டவட்டம்…கவலையில் ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக  நடைபெற்ற  டெஸ்ட் போட்டியின் போது  ஆஸ்திரேலிய அணி வீரர்கலான ஸ்மித், வார்னர், பான்கிராப்  பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப் மீது விசாரணை நடத்தி அதில் இவர்கள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடையும் பான்கிராப்டுக்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சமீப காலமாக ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் மோசமாக இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், முன்னணி வீரர்களான ஸ்மித், வார்னருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம்,ரசிகர்கள் குரல் கொடுத்தது.ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வாரியத்திடம் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடை நீக்க வேண்டி கோரிக்கையும் வைத்தனர்.ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடை தொடரும் என்று உறுதிபட தெரிவித்துள்ளது.இதனால் ரசிகர்கள் மீண்டும் கவலையடைந்துள்ளனர்.
DINASUVADU.COM
author avatar
Dinasuvadu desk

Leave a Comment