ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல்லுக்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சிம் கார்டுக்கு அளிக்கப்பட்ட ஆதார் தகவலை பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கியதால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை எடுத்ததாகவும் கூறுகிறது மத்திய அரசு..
ஆனால் அம்பானியின் ஜியோ இம்மாதிரியான முறையில் தான் வாடிக்கையாளரிடம் இருந்து ஆதார் தகவல்களை பெற்றுக்கொண்டு சிம் கார்ட்களை வழங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.