அர்கே நகர் : தொப்பிக்கு போட்டிபோடும் 29 சுயேட்சைகள்

ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலில் TTV.தினகரன் அவர்கள் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார்.

தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதே தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் இதே தொப்பி சின்னத்தை ஆர்கே நகரில் போட்டியிடும் சக சுயேச்சை வேட்பாளர்களும் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகின்றனர்.  இந்நிலையில், சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியது,

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்துள்ளது. 7-ந் தேதி (இன்று) பிற்பகல் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் உள்ளது. இங்கு பெறப்பட்ட மொத்தம் 145 மனுக்களில், 72 மனுக்கள் ஏற்கப்பட்டு, 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தொப்பி சின்னத்தைக் கேட்டு 52 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் போக தற்போது தொப்பி சின்னம் கேட்டவர்களில் தினகரன் உட்பட 29 சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.

இனி குலுக்கல் முறையில் இவர்களில் ஒருவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படும். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நாளை (இன்று) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.’  என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment