அரியலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்துக் 92 சவரண் தங்க நகைகள் கொள்ளை!

செந்துறையை அடுத்த நாகல்குழி கிராமத்தை சேர்ந்த சின்னப்பா, கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி தில்லைநாயகி, மகன் தினேஷ் நாகல்குழியில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு திருவிழாவைக் காண தில்லைநாயகி மற்றும் தினேஷ் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த 92 சவரண் தங்க நகைகள், 10ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment