அதிமுகவை பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது..!!அமைச்சர் அதிரடி விமர்சனம்..!

அதிமுகவை பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பின்னர் டிடிவி தினகரன் அணியில் இணைந்து தற்போது இந்த இரு கட்சிகளிலும் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ள செந்தில்பாலாஜியை இரு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.
Related image
இந்நிலையில் கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி  ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவித்த அவர் அதிமுகவைப் பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது.மேலும் செந்தில்பாலாஜி தன் சட்டையை மாற்றுவது போல 5 முறை கட்சிகளை மாற்றி இருப்பதாகவும் தன் பதவி சுகத்துக்காக கட்சி தாவியுள்ளார் அவரை அடையாளம் காட்டிய அதிமுகவுக்கும் ,அவரை நம்பி வந்த அமமுக நிர்வாகிகளுக்கும் அவர் துரோகம் செய்துள்ளார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
 

author avatar
kavitha

Leave a Comment