பலாத்காரம் செய்து 9 மாத குழந்தையை கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை !

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சார்ந்த  பிரவீன் இவர் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 9 மாத குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது.  இதை தொடர்ந்து பொதுமக்கள் பிரவீனை போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.

இது தொடர்ந்து பிரவீன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு  வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த போது பிராவின் பிரவீன் மதுபோதையில் செய்து விட்டதாக  குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் இந்த குற்றம் சாட்டப்பட்ட  பிரவீனுக்கு  நீதிபதி மரண தண்டனை அளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு 48 நாள்கள் விசாரிக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

author avatar
murugan