எல்லையில் பறிகொடுத்த பகுதிகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு மோடி அரசு கொண்டு வருமா?
லடாக் எல்லையில், இந்திய வீரர்கள் மீது சீன இராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் இந்த செயலை கண்டித்து பலரும் குரல் எழுப்பி வருகிற நிலையில், ப.சிதம்பரம் அவர்கள், லாடாங்க் விவகாரத்தில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெறுமா? என்று மக்கள் கவனிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எல்லையில் பறிகொடுத்த பகுதிகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு மோடி அரசு கொண்டு வருமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.