திருச்சியில் நடந்து சென்றவிடம் செல்போன் பறிப்பு..,

திருச்சி: கோபால் மகன் அருண்குமார் இவர் திருச்சி தில்லைநகர் ஜீவா நகரை சேர்ந்தவர். இவர் அந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நேற்றுமுன்தினம் மாலை  செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த 2 பேர், அருண்குமாரிடம் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் அருண்குமார் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார்.அருண்குமார் கொடுத்த  புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் பறித்துச் சென்றது பீமநகரை சேர்ந்த சாய்மன் கிஷோர், கூனி பஜாரை சேர்ந்த முகமது இப்ராகிம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்து 2 பேரையும் நேற்று கைது செய்ததனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment