மேற்கொண்டு சொத்துக்களை முடக்கக்கூடாது!விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு.

இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா,  தற்போது இங்கிலாந்தில் இருந்து வருகிறார்.

இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.  கடந்த மாதம் ஜூலை 29-ஆம் தேதி விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனது சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும்,கிங் ஃ பிஷர் நிறுவன சொத்துக்களை தவிர, மேற்கொண்டு சொத்துக்களை முடக்க தடை கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஆகஸ்ட்  2-ஆம் தேதி அதாவது இன்று விசாரிக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனையடுத்து இன்று வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.