ஓடும் ரயிலில் இருந்து விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய பெண் -வைரலாகும் வீடியோ!

நேற்று முன்தினம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பெரிய பைகளுடன் நகர்ந்து கொண்டு இருந்த ரயில் ஏற முயற்சி செய்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கையில் இருந்த பைகளுடன் ரயிலில்  ஏற முடியாமல் கீழே விழுந்தார்.

அப்பெண் விழுந்த உடனே அங்கு நின்று கொண்டு இருந்த பயணிகள் மற்றும் காவல் துறை ஓடி சென்று அப்பெண்ணை காப்பாற்றினர் அதனால் அப்பெண் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் இரவு 10.15 மணிக்கு  நடந்து உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

author avatar
murugan