வேலூர் மக்களவை தேர்தல் : சுயேச்சைக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது.

ஆனால்  தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியது.அதேபோல்   4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டகம்  சின்னம் ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடாத நிலையில் சுயேச்சைக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு  செய்துள்ளது தேர்தல் ஆணையம்.