இன்று இரவு முதல் தமிழகம் முழுவதும் விஏஓக்கள் தர்ணா போராட்டம்!

தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் விஏஓக்கள் தர்ணா செய்ய முடிவு செய்துள்ளனர் .

திருவண்ணாமலை, ஜன.8: தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சான்றுகளுக்கு ஒப்புதல் வழங்க கிராம நிர்வாக  அலுவலர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினியும், இணையதள சேவைக்கு மோடமும் வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இணையதளக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. இதையடுத்து, இணையதள கட்டணத்திற்கு பணம் வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள், கடந்த டிசம்பர் 15ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 8ம் தேதி (இன்று) மாலை 6.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
source: dinasuvadu.com

Leave a Comment