இன்று முதல் புதிய உதயமானது தென்காசி மாவட்டம்!

திருநெல்வேலி மாவட்டத்துடன் ஒன்றியிருந்த தென்காசி தற்போது தனக்கென தனி எல்லைகளை பிரித்துக்கொண்டு தனி மாவட்டமாக இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. திருநெல்வேலியின் சிறப்புகளாக கூறப்பட்டு வந்த முக்கிய சிறப்புகள் இனி தென்காசி மாவட்டத்தின் தனிசிறப்புகளாக மாறியுள்ளன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், செங்கோட்டை,  ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய முக்கிய பகுதிகளை எல்லைகளாக கொண்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தான், உலக புகழ்பெற்ற குற்றால அருவி உள்ளது. இனி குற்றால அருவி தென்காசி மாவட்டத்தினுடையது. இனி கேரள எல்லை தென்காசி மாவட்டம் தான். திருநெல்வேலிக்கு அந்த சிறப்பு இல்லை.
தொழிற்சாலைகள் அதிகம் இல்லாததால் தென்காசி மாவட்டம் சுற்றுலாத்துறையை தான் நம்பியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.