டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் பற்றிய அறிய தகவல்கள்!

ஜபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் சிறப்பாக முடிவந்துள்ளது. தற்போது இந்திய வெஸ்ட் இண்டீஸுடன் சுற்றுள்ளா தொடரை மேற்கொள்ள உள்ளது. இதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையைக் கண்டறியும் வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்கி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது.

இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்,
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் (சென்னை அணி),காரைக்குடி காளைகள், திருச்சி வாரியர்ஸ், தூத்துக்குடி பேட்ரியோட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காஞ்சி வீரன் என எட்டு அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன்  ஒரு முறை மோத வேண்டும். முதல் நான்கு  இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் தகுதியை பெறும்.

நாளைய முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும்
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் மோதவுள்ளது.

author avatar
Vidhusan