ஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதல் எதிரொலி! திருவாரூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

  • நேற்று முன்தினம் ஜே.என்.யு மாணவ அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 
  • இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 5ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவர்கள் முகமூடி அணிந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் திருவாரூரில் கல்ல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்திவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.