சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு…!மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (23/10/18) முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.
ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி மருதுபாண்டியர்   நினைவு தினம்  அனுசரிக்கப்படும். அதேபோல் தேவர் ஜெயந்தி அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் நினைவுதினம் மற்றும் தேவர் குருபூஜையையொட்டி 144 தடை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று (23/10/18) முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்

Leave a Comment