தொடர் மழையால் ஒருநாள் போட்டி 20 ஓவர் போட்டியாக மாற்றம்…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  விளையாடுகிறது.

இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டியானது இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டது காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் சரியான நேரத்தில் டாஸ் போடப்படவில்லை.

இதையெடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் 50 ஓவர் கொண்ட போட்டியை 20 ஓவராக குறைத்து மாலை 06.30 மணிக்கு போட்டி துவங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

author avatar
murugan