விரைவான நீதி மக்களுக்கு கிடைக்க நீதித்துறை மற்றும் அரசு உறுதி செய்ய வேண்டும்!

மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை அரசும் நீதித்துறையும் உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் 75 ஆவது ஆண்டுவிழாவில் காணொளி மூலம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஏழை மக்களின் சட்டப் பிரச்சினைகளை கடமையாக எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு கூறியுள்ளார்.

மேலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சட்டம் எளிமையாக சிக்கல்கள் இல்லாத வகையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல சட்டத்தின் நோக்கமும் காரணமும் தெளிவாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை அரசும், நீதித்துறையும் உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Rebekal