குழந்தைகள் உள்ள வீட்டில் ஆடு ,மான் சாப்பிடும் ராட்சத பாம்பு வளர்த்த தந்தை..!

பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த மார்கஸ்(31).மூன்று படுக்கை அறைகள் கொண்ட  தனது வீட்டில்  ராட்சத மலைப்பாம்பு வளர்த்து வந்து உள்ளார்.இந்த பாம்பு 8 இஞ்ச் இருக்கும் போது தனது வீட்டிற்கு மார்கஸ் கொண்டு வந்து உள்ளார்.
இந்த பாம்பு சாப்பிட அங்கு உள்ள விவசாயிகள் கொண்டு வந்து கொடுத்த முயல் மற்றும் இறந்த மான் , ஆடுகளை தின்று அந்த பாம்பு ராட்சத மலைப்பாம்பாக மாறியுள்ளது.மார்கஸ் வீட்டில் இரண்டு மற்றும் நான்கு வயதில் குழந்தைகள் உள்ளனர்.
அப்படி இருக்கையில் இப்படி இவ்வளவு பெரிய ராட்சத மலைப்பாம்பை வளர்க்கிறீர்கள் என மார்கஸிடம் கேட்டபோது குழந்தைகள் இருக்கும் போது கூண்டில் இருந்து பாம்பை எடுக்கமாட்டாராம்.
குழந்தைகள் வேறு ஒரு அறையில் இருக்கும் போது அல்லது தூங்கும் போதும் இந்த ராட்சத மலைப்பாம்பை கூண்டில் இருந்து வெளியில் எடுப்பதாக மார்கஸ் கூறினார்.மேலும் இந்த ராட்சத மலைப்பாம்பிற்கு மாதம் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாவதாக கூறினார்.
 

author avatar
murugan