ஒரே வீட்டில் நான்கு ஆண்களுடன் வசித்து வந்த இளம்பெண் கர்ப்பம்..! விளக்கம் அளித்த பெண் ..!

  • டோரி ஓஜெடா என்ற பெண் நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
  • கடந்த ஜூலை மாதம் டிராவிஸை என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
    தற்போது டோரி ஓஜெடா கர்ப்பமாக  உள்ளார்.
  • இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது.
  • அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில் பகுதியில் டோரி ஓஜெடா (20) என்ற இளம்பெண் நான்கு ஆண்களுடன் வசித்து வருகிறார்.இவர் பள்ளி படிக்கும்போது மார்க் (தற்போது 18 வயது) இவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் தொடர்பில் இருந்து உள்ளார்.

பின்னர் மார்க்கை சந்தித்த இரண்டு மாதத்தில் டிராவிஸ்(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து டோரி ஓஜெடாவின் நீண்ட நாள் நண்பர்களான ஏதன் (22) மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய நான்கு ஆண்களுடன் டோரி ஓஜெடா ஒன்றாக வசித்து வந்து உள்ளார்.

இவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் அனைவருக்கும் தனித்தனி அறைகள் உள்ளது.டோரி ஓஜெடா நான்கு பேருடனும் படுக்கையை பகிந்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் டோரி ஓஜெடா , டிராவிஸை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது.

இதைதொடந்து டோரி ஓஜெடா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது.அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார்.மேலும் நாங்கள் அனைவரும் குழந்தை வளர்ப்பதில் ஒன்றாக இருக்கிறோம்.எங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என டோரி ஓஜெடா கூறினார்.

author avatar
murugan