வீட்டை புதுமை படுத்தும் பொங்கல் பண்டிகை…!!

பொங்கல் வந்து விட்டால் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமனெயெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். வீடுகளில் உள்ள தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும் மண் மேடுகளில்  கூடை கூடையாய் மண் எடுப்பார்கள்.மண்ணை வீட்டின் வெளியே கொட்டி தண்ணீர் விட்டு, நல்லா சாணி மிதிப்பது போல் மிதித்து வீட்டின் தரையில் பூசிக் கொண்டு வருவார்கள்.வீட்டை அழகு படுத்தி சுவருக்கு வண்ணம் ( வெள்ளை ) அடிப்பார்கள்.