சுர்ஜித் மீட்கும் இடத்தில் லேசான சாரல் மழை..!

திருச்சி மாவட்டத்தில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து17மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் லேசான மழை பெய்வதால் ஆழ்துளை கிணற்றில் மழைநீர் செல்லாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடி தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். லேசான மழை பெய்வதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

author avatar
murugan