இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது! தனது 45வது படம் பற்றி சிம்பு பெருமிதம்!

தமிழ் சினிமாவில் முன்னை ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது மஹா ( சிறப்பு தோற்றம் ), வெங்கட் பிரபுவின் மாநாடு, நர்த்தன் இயக்கத்தில் சிம்புவின் 45வது படம் என பிசியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கும் உடன் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஹிட்டான முஃப்டி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

இப்படம் பற்றி சிம்பு கூறுகையில், ‘ இப்பட கதை என்னை மிகவும் கவர்ந்தது எனவும், இந்த படத்தில் நடிக்க நான் மிகவும் விரும்பினேன்.இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேள்ராஜா எனக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் சிம்பு கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.