தொடங்கியது உள்ளாட்சி தேர்தலுக்கான விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு!

  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 156 ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது.
  • வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்

தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் 156 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.