கீழடியில் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன்

கீழடியில் விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கீழடியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் . 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் .
விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.