பும்ராவிற்கு பிறகு புதிய சாதனை படைத்த ஷமி ..!

இந்தியா , தென்னாபிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு இந்திய அணி 395 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆனால் தென்னாபிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
இறுதியாக இந்திய அணி  203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 10.5 ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.அவர் வீழ்த்திய  ஐந்து விக்கெட்களில் நான்கு விக்கெட்கள் பவுல்டு முறையில் கிடைத்தது.
இதனால் இந்திய வீரர்களில் ஒரே இன்னிங்க்ஸில் நான்கு பவுல்டு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார் . சென்ற  மாதம் பும்ரா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக  போட்டியில் நான்கு விக்கெட்கள் பவுல்டு முறையில் எடுத்து சாதனை படைத்தார்.  அதன் பிறகு ஷமி இந்த சாதனையை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan