தனது நாய்க்காக உயிரை இழந்த இராணுவ வீரர்..!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் குல்மார்க்கில் ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் கடந்த 29-ம் தேதி திடீரென  தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது  தீயில் சிக்கிய மனைவியும் , வீட்டில் வளர்த்த நாய்களின் ஒன்றை மட்டும் ராணுவ அதிகாரி மேஜர் அன்கிட் ராஜா காப்பாற்றினார். இதையெடுத்து மற்றோரு நாய் தீயில் சிக்கி தவித்தது.

அதை காப்பாற்ற முயற்சி செய்த மேஜர் அன்கிட் ராஜா பலத்த தீக்காயம் ஏற்பட்டு 90% காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

author avatar
murugan