யானையுடன் நடக்கும் போது பயமா இருந்துச்சி! ஆனா பிரியும் போது கஷ்டமா இருக்கு! பிரபல நடிகர் அதிரடி!

சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால். 

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தின் நாயகனாக ராணா டக்குபதி நாயகனாக  நடித்துள்ளார்.  மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய விஷ்ணு விஷால், படப்பிடிப்பின்போது எனக்கு உடலில் ஒரு அடிபட்டது. அந்த அடிதான் உடலுக்கும் மனதுக்கும் மாற்றத்தைக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் காடன் படம்  தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், பிரபு சாலமன்  தனி நபராக இருந்து இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். நான்  கடினமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். காடு,  இயற்கை என்றாலே எனக்கு பயம். படப்பிடிப்பில் யானையுடன் நடக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் யானையை பிரியும்போது வருத்தமாக இருந்தது தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.